'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மறைந்த பாடும் நிலா பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சிகரம் தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் பாலு என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்ட நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்தவர் கடந்த செப்., 25ம் தேதி மறைந்தார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் என சிகரம் தொட்டவர் எஸ்.பி.பி.,. ராகங்கள் பதினாறு, அதில் எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு தேன் கலந்த தனது குரலால் ரசிகர்களை மயக்கி தாலாட்டி வைத்தார். இப்போது அவரது புகழுக்கு மற்றுமொரு மகுடமாய் பத்ம விபூஷண் விருதை அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது.
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... என்று அவர் பாடிய வரிகள் என்றும் நிலைத்து இருக்கும் என்பது திண்ணம்.
சின்னக்குயில் சித்ராவுக்கு பத்மபூஷண்
கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, சின்னக்குயில் சித்ரா என அழைக்கப்படுகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காளி, ஒரியா, குஜராத்தி, துளு, பஞ்சாபி, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா எனவும் சிங்களம், மலாய், அரபு, லத்தீன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் என்று அயல்நாட்டு மொழிகளிலும் ஏறத்தாழ 25000க்கும் மேல் பாடல்களைப் பாடி தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கி உள்ளார். 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் பெற்றுள்ள இவர், கடந்த 2005ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். இப்போது மற்றுமொரு மகுடமாய் பத்மபூஷண் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீக்கு பத்மஸ்ரீ விருது
இதேப்போன்று பிரபல கர்நாடக பின்னணி பாடகியும், சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் பாடி உள்ளார். தமிழில், நறுமுகையே நறுமுகையே...., வசீகரா வசீகரா... முதல் கனவே முதல் கனவே..., ஒன்றா இரண்டா..., மலர்களே மலர்களே மலர்ந்திட வேண்டாம்..., சுட்டும் விழி சுடரே..., உயிரே என் உயிரே... உள்ளிட்ட பல அருமையான பாடல்களை பாடி உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள இவருக்கு இப்போது மற்றுமொரு மகுடமாய் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.