ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
பிக்பாஸ் போட்டியாளர்களை தரம் தாழ்ந்த விமர்சனங்கள் செய்வது வேதனை அளிப்பதாக பிக்பாஸ் சீசன்-4 வின்னரான நடிகர் ஆரி. அதுகுறித்து ஆரி ஒரு பேட்டியில் கூறுகையில், ''தரம் தாழ்ந்த விமர்சனங்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்தபோது இந்த விமர்சனங்களை அறிந்து வேதனை அறிந்தேன். என்னுடைய சக போட்டியாளர்களுடன் எனக்கு போட்டி இருந்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்க முடியாது. அவர்கள் இல்லாமல் நானில்லை. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. அதனால் சமூகவலைதளங்களில் முகம் தெரியாத நபர்கள் கண்டபடி விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதுவும் என்னுடைய பெயரில் இதுபோன்ற தவறான விமர்சனங்கள் வந்ததை அறிந்து மிகப்பெரிய வேதனை அடைந்தேன். அதோடு, விமர்சனம் என்பது எனது பெயரில் இருந்தாலும், இன்னொருவர் பெயரில் இருந்தாலும் அதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.