மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடிக்கும் கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் டீசர் கடந்த வாரம் யு டியுபில் வெளியானது.
வெளியான நேரத்திலிருந்தே தொடர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்து வந்தது. தற்போது மேலும் ஒரு சாதனையாக 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு வாரத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதோடு 7.4 மில்லியன் லைக்குகளும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளும் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளது.
இந்திய அளவில் பிரபலத்திலும், வசூலிலும் சாதனை படைத்த பல ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஹீரோக்கள் படைக்காத ஒரு சாதனையை கன்னட உலகின் இளம் ஹீரோவான யாஷ் படைத்திருப்பது இந்தியத் திரையுலகல் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதைவிட பொறாமைப்பட வைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அது பற்றி பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில், “மற்ற திரையுலகத்தினரின் வயிற்றில், கன்னடர்களின் சார்பாக பிரஷாந்த் நீல் விட்ட குத்து இது,” என பாகுபலி 2 டிரைலர், மற்றும் ஆர்ஆர்ஆர் பட ஆகியவற்றை ஒப்பிட்டு தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.