புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகண்ணா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதையடுத்து தற்போது அந்த டீசர் குறித்த சில சர்ச்சைகளும் சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அதாவது, துக்ளக் தர்பார் படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் பார்த்திபனின் பெயர் ராசிமான் என்றும், அவர் மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்துவதாகவும் அந்த டீசரில் ஒரு போஸ்டர் இடம்பெற்றது. அதோடு, புலி உள்ள வரை உங்கள் புகழ் இருக்கும் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றிருந்தது. இது தான் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பு விவாதமாகியிருக்கிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக் குமரன் வெளியிட்ட செய்தி : துக்ளக் தர்பார் திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கு எதிரானது போல சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபொழுது "தெரியாமல் நடந்து விட்டது அந்தமாதிரி காட்சிகளை சிஜி பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கி விடுகிறேன் என உறுதி அளித்துள்ளார்.
இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குனர், இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக்காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுதும் ஒரு காட்சி கூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். இழவுவீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.