புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியாகி 2 வருடம் ஆகும் நிலையில், அடுத்தபடியாக அவர் நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ல் திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம் இப்படம் வெளியீடு தொடர்பாக சிக்கலும் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால் படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்பமான நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்திற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க தொடங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு சில பல பிரச்னைகளை கடந்து மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் சில போஸ்டர்கள் ரசிகர்களை ஈர்த்த நிலையில் இப்போது பொங்கல் அன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது.