பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சினிமா இயக்குனராக இருந்த சீமான் அரசியல் களத்திற்கு சென்ற பின் படங்களை இயக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சில படங்களில் நடிக்க மட்டும் செய்கிறார். அது சமயங்களில் சிறப்பு வேடங்களாகவும் இருக்கும் அல்லது படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களாக இருக்கும். தற்போது தர்மயுத்தம் என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆர்கே சுரேஷ், அனு சித்தாரா, இளவரசு, எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதை ஆர் சுப்ரமணியன் இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஆதம் பாவா தயாரித்துள்ளார்.
இதுபற்றி தயாரிப்பாளர் ஆதம் பாவா நமக்கு அளித்த பேட்டியில், ‛‛இது ஒரு கிரைம் திரில்லர் கதை. சேவற்கொடி படத்தை இயக்கிய சுப்ரமணியன் இயக்குகிறார். போலீஸ் உதவி கமிஷனராக சீமான் வருகிறார். தீர விசாரிப்பதே மெய் என படத்தின் தலைப்பில் அடைமொழி கொடுத்துள்ளோம். அது தான் படத்தின் அடிநாதம். படத்தில் ஒரு துளி கூட அரசியல் இருக்காது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இன்னும் தேதி முடிவாகவில்லை, விரைவில் அறிவிப்பு வரும்'' என தெரிவித்தார்.
இதே தலைப்பில் 1979ல் ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் ஆர்சி சக்தி இயக்கத்தில் தர்மயுத்தம் என்ற படம் வெளிவந்தது. அதே தலைப்பில் இப்போது சீமான் படம் தயாராகி வருகிறது.