ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'.
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்போது படத்தின் நாயகி ராஷி கண்ணா இப்படத்திற்கான அவருடைய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து, “சூப்பர் திறமைசாலியான விஜய் சேதுபதி உடன், மற்றுமொரு அழகான பயணம் 'துக்ளக் தர்பார்' நிறைவுக்கு வந்தது. மறக்க முடியாத இப்படத்தைக் கொடுத்த இயக்குனர் தீனதயாளன், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர், அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ராஷி கண்ணா நடிக்கும் ஐந்தாவது படம் இது. 'சங்கத்தமிழன்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்.