ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர்கள் தான் கவுண்டமணி-செந்தில் இருவரும். இதில் கவுண்டமணி சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார்.. ஆனால் செந்திலுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. சில வருடங்களுக்கு முன் செந்தில் கதாநாயகனாக நடிக்க, ஆதிவாசியும் அதிசிய பேசியும்' என்கிற படம் அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி பாராட்டு பெற்ற 'ஒரு கிடாரியின் கருணை மனு' படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா, நடிகர் செந்திலை கதையின் நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்தப்படத்தில் செந்தில் பல வருட சிறைதண்டனை பெற்ற குற்றவாளியாக நடிக்கிறாராம். மீண்டும் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ஆர்வம் காட்டி வந்த செந்திலை, சுரேஷ் சங்கையா சொன்ன கதை கதையின் நாயகனாக நடிக்க உடனே சம்மதிக்க வைத்து விட்டதாம். அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வரும் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.