லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. அந்த அனுமதிக்கு திரையுலகினர் சார்பில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து கருத்துக்களைப் பகிர்ந்தார்கள்.
நடிகர் அரவிந்த்சாமி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து டுவீட் செய்துள்ளனர். கொரானோ தொற்று காலத்தில் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர்கள் பலரும் 100 சதவீத இருக்கை அனுமதி என்பது குறித்து எச்சரிக்கை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பொங்கலுக்கு வர உள்ளன. பண்டிகைகக் காலம் என்பதால் மக்கள் நெருக்கம் அதிகமாகவும் இருக்கும். முன்னணி நடிகர்களின் படங்கள் என்பதால் அவற்றைப் பார்க்க அரங்கு நிறைந்த அளவிற்கு மக்கள் திரண்டால் அது கொரானோ பரவலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஒரு பெரிய படம் வெளிவந்தால் அதிக பட்சமாக இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வருகிறார்கள். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கினால் இரண்டு வாரங்களில் ஆகும் வசூல், 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கும் போது மேலும் இரண்டு வாரங்களில் வசூலித்துவிடப் போகிறது.
'மாஸ்டர்' படத்திற்காக விஜய் 80 கோடி சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அவர் தன்னுடைய சம்பளத்தை பாதியாகக் குறைத்துக் கொண்டு 40 கோடியை திருப்பிக் கொடுத்துவிட்டால் அந்த இரண்டு வார வசூல் பிரச்சினையும் இல்லை. அதற்காக மக்கள் தாங்களாகவே தேடிப் போய் ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டுமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும், தற்போது உருமாறிய கொரானோ என்ற புதிய ஆபத்தும் வந்திருக்கிறது. நாம் இன்னும் தொற்று பரவல் என்ற நிலையில் இருந்து முற்றிலுமாக விலகவில்லை. எனவே, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்பது ஆபத்தானது என்ற கருத்து தற்போது அதிகமாகப் பரவி வருகிறது.
மேலும், தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி பற்றிய சிக்கலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.