ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கொரோனா தொற்று பரவல் காரணமாக தியேட்டர்கள் எட்டு மாதங்கள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை. முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்பதே அதற்குக் காரணம் என திரையுலகில் தெரிவித்தார்கள்.
அதனால், 'மாஸ்டர்' படத்தை எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட வைத்துவிட வேண்டும் என முடிவு செய்து அதை நிறைவேற்றி வருகிறார்கள். ஜனவரி 13ம் தேதியன்று 'மாஸ்டர்' படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தை மட்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் வெளியிட ஒரு சாரார் முயற்சித்தார்கள்.
ஆனால், சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தையும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். இதனிடையே, 'மாஸ்டர்' படம் மட்டுமே தனியாக வெளியாக வேண்டும் என அப்படத்தை வாங்கியுள்ளவர்கள் முயற்சி செய்து வருகிறார்களாம். அதனால், எப்படியாவது 'ஈஸ்வரன்' படத்தை வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
சிம்பு நடித்து வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட பஞ்சாயத்து பிரச்சினையை இப்போது தூசி தட்டி எடுத்துள்ளார்களாம். இதுதொடர்பாக ஏற்கனவே டி.ராஜேந்தர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் ஒரு எச்சரிக்கை அனுப்பியது. அதாவது, ஏஏஏ பட விவகாரத்தை காரணம் காட்டி ஈஸ்வரன் படத்தை வெளிவர விடாமல் தடுக்கும் முயற்சி நடக்கிறது. இதை வன்மையாக கண்டிகிறோம். சொன்ன தேதியில் ஈஸ்வரன் படம் வரும் என கூறப்பட்டிருந்தது. நாளை இந்த விவகாரம் பரபரப்பாகும் எனத் தெரிகிறது.
கொரோனாவுக்குப் பிறகு மீண்டு வர நினைக்கும் சினிமாவை இப்படி சினிமாவில் உள்ளவர்களே கெடுக்கிறார்களே என ஆதங்கப்படுகிறார்கள் சிலர்.