பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'ஆச்சார்யா' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
அப்படத்திற்காக ஐதராபாத் புறநகர் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான கோயில் செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம். 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 கோடி செலவு செய்து அந்த செட்டை கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜன் உருவாக்கியிருக்கிறார்.
இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இப்படி ஒரு செட் அமைத்ததில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கோயில்கள், அறநிலையத் துறை பின்னணியில் தான் 'ஆச்சார்யா' படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் இந்த பிரம்மாண்ட கோயில் செட்டும் முக்கிய கதைக்களமாக உள்ளதாம். படத்தை இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.