ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'ஆச்சார்யா' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
அப்படத்திற்காக ஐதராபாத் புறநகர் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான கோயில் செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம். 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 கோடி செலவு செய்து அந்த செட்டை கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜன் உருவாக்கியிருக்கிறார்.
இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இப்படி ஒரு செட் அமைத்ததில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கோயில்கள், அறநிலையத் துறை பின்னணியில் தான் 'ஆச்சார்யா' படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் இந்த பிரம்மாண்ட கோயில் செட்டும் முக்கிய கதைக்களமாக உள்ளதாம். படத்தை இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.