ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சொன்னதை செய்ய முடியாததால், மன உளைச்சலில் உள்ள ரஜினி, மன நிம்மதிக்காக ஆன்மிக குருமார்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
சரியான ஆளுமை இல்லாமல் தவிக்கும் தமிழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும், கட்சி ஆரம்பித்து, 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார், ரஜினி. ஆனால், கொரோனா அச்சத்தால், அரசியலில் நுழையும் முடிவில் இருந்து பின்வாங்கினார்.கடந்த மாதம், ஐதராபாத் சென்ற ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றார். அங்கு படக்குழுவினருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது.
மேலும் ரத்த அழுத்த பிரச்னை காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, உரிய சிகிச்சைக்கு பின், வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, கட்சி ஆரம்பிப்பதில் இருந்து பின்வாங்கினார். ஆனாலும், ரசிகர்களையும், நிர்வாகிகளையும் ஏமாற்றி விட்டோமோ என்ற மன உளைச்சலில், அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி வீட்டுக்கு, நமோ நாராயணா சுவாமிகள் வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்ற ரஜினிக்கு,ஸ்படிக மாலையை அணிவித்து, ஆசிர்வதித்து, அவருடன் சிறிது நேரம் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த படங்கள், தற்போது இணையதளத்தில் உலா வருகின்றன. ஆன்மிக அரசியலை அறிவித்த ரஜினி, தற்போது மன நிம்மதிக்காக, ஆன்மிக பயணம் மேற்கொள்வார் என, தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கும் ரஜினி, விரைவில் தனது அன்மிக பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.