சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

சினிமாவில் வில்லனாக அறிமுகமான ஆனந்தராஜ், 'கவர்மெண்ட் மாப்பிள்ளை' படத்தின் மூலம் ஹீரோவானர். அதன்பிறகும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் மீண்டும் வில்லனாக நடித்தார். பிறகு காமெடி, வில்லனாக நடித்தார்.
தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு 'மதறாஸ் மாபியா கம்பெனி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். இதில் அவருடன் சம்யுக்தா, தீபா, முனீஸ்காந்த், ராம்ஸ், ஷகிலா, சசிலயா, ஆராத்யா, மஸ்காரா அஸ்மிதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அண்ணா புரொடக் ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
படத்தை இயக்கும் ஏ.எஸ்.முகுந்தன் கூறும்போது, ''வட சென்னையின் மிகப்பெரிய டான் ஆக திகழும் ஆனந்த்ராஜின் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் இலக்குடன் காவல்துறை அதிகாரி சம்யுக்தா களமிறங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஒரு டானின் வாழ்க்கையையும், அவனது இறுதிகட்ட வாழ்க்கையையும் எதார்த்தமாகவும், அதேவேளை நகைச்சுவையாகவும் சொல்கிறோம்" என்றார்.




