சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பொதுவாக ஸ்டார் ஹீரோக்களின் வாரிசுகள் ஹீரோக்களாக அறிமுகமாகும்போது இது வழக்கம்தானே என பெரிய அதிர்வுகள் ஏற்படாது. அதே சமயம் அவர்கள் இயக்குனர்களாக மாறும்போது ஆச்சரியமாக அனைவரது கவனமும் அந்த பக்கம் திரும்பும். அப்படி நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தாத்தாவை போல இயக்குனர் பாதையில் அடிஎடுத்து வைத்து படம் இயக்கி வருகிறார். ஆனால் இதுநாள் வரை அவரது தந்தையான விஜய் தனது மகன் பற்றியோ அவர் டைரக்ஷனில் நுழைந்தது பற்றியோ ஒரு வார்த்தை கூட வெளிப்படையாக பேசியதில்லை. இருவரும் இணைந்து எடுத்த ஒரு போட்டோ வெளியாகி கூட பல வருடங்கள் ஆகிவிட்டது.
அதே சமயம் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானின் மகனும் தந்தையை போல நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் டைரக்ஷன் பக்கம் பார்வையை திருப்பி உள்ளார். அந்த வகையில் தற்போது 'தி பே***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தனது மகன் பற்றியும் அவரது டைரக்சன் பற்றியும் பெருமையாக வெளியே பேசி வருகிறார்.
ஆர்யன் கான் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது போல தான் தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடும்போது ஆர்யன் கான் இயக்கி வரும் படம் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், “படம் சூப்பராக இருக்கிறது. நீங்கள் பார்த்துவிட்டு தீர்மானியுங்கள். ஆனால் பொழுதுபோக்காகவும் உணர்ச்சி பூர்வமாகவும் உருவாகி இருக்கிறது. இது என்னுடைய நேர்மையான விமர்சனம்” என்று கூறியுள்ளார்.