வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மலையாள திரையுலக நடிகர் சங்கம் ‛அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அப்போது தலைவராக பொறுப்பு வகித்து வந்த மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிர்வாகிகள் பெரும்பாலானோர் அவரைத் தொடர்ந்து மொத்தமாக ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்று வருகிறது. எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த தேர்தலில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு ஓட்டளித்தார்.
அதன்பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உறுப்பினர்களின் கருத்துப்படி புதிய குழு அமைக்கப்படும். அது சரியான பாதையில் நடிகர் சங்க நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும். யாரும் இந்த சங்கத்தை விட்டு விலகவில்லை. எல்லோருமே இப்போதும் இதில் ஒரு அங்கமாக தான் இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு புதிய நிர்வாகத்தை வழங்க முடியும் என நம்புகிறேன்” என்று கூறிய அவர் ஓட்டளித்த பிறகு அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக கிளம்பிச் சென்றார்.




