பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் ‛அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அப்போது தலைவராக பொறுப்பு வகித்து வந்த மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிர்வாகிகள் பெரும்பாலானோர் அவரைத் தொடர்ந்து மொத்தமாக ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்று வருகிறது. எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த தேர்தலில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு ஓட்டளித்தார்.
அதன்பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உறுப்பினர்களின் கருத்துப்படி புதிய குழு அமைக்கப்படும். அது சரியான பாதையில் நடிகர் சங்க நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும். யாரும் இந்த சங்கத்தை விட்டு விலகவில்லை. எல்லோருமே இப்போதும் இதில் ஒரு அங்கமாக தான் இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு புதிய நிர்வாகத்தை வழங்க முடியும் என நம்புகிறேன்” என்று கூறிய அவர் ஓட்டளித்த பிறகு அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக கிளம்பிச் சென்றார்.