மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி |
1943ம் ஆண்டு வெளியான படம் 'மங்கம்மா சபதம்'. ரஞ்சன், வசுந்தராதேவி. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்திருந்தார்கள். ஜெமினி வாசன் தயாரித்த இந்தப் படத்தை ஆச்சார்யா இயக்கினார். எம்.டி.பார்த்தசாரதி, எஸ்.ராஜேஸ்வர ராவ் இருவரும் இசையமைத்தார்கள். படத்தில் மொத்தம் 15 பாடல்கள். அனைத்துமே மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்து படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
1985ம் ஆண்டு கே.பாலாஜி தயாரிப்பில், கமல், சுஜாதா, மாதவி, சத்யராஜ் நடிப்பில் வெளியான 'மங்கம்மா சபதம்' தோல்வி அடைந்தது. என்றாலும் கமலின் நடிப்பும், சத்யராஜின் வில்லத்தனமும், சுஜாதாவின் அம்மா சென்டிமெண்டும் இப்போதும் படத்தை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
தன் குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்குவேன் என்று சபதம் எடுக்கும் மங்கம்மா, தன் மகனை கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதுதான் இரண்டு படத்தின் கதையும்.