ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகை தமன்னா சினிமாவில் நடிப்பதோடு சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் என் முகத்தில் பருக்கள் வந்தால் அதற்கென தனியாக சிகிச்சை எதுவும் செய்து கொள்வதில்லை, காலை எழுந்ததும் பிரஷ் பண்ணாமல் வாயில் ஊரும் உமிழ்நீரை தொட்டு வைப்பேன். அதுவாகவே சரியாகி விடும் என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு தோல்மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் ரஷ்மி ஷர்மா என்பவர் கூறும்போது "இது மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது. பிரபலங்கள் இதுபோன்ற பரிசோதிக்கப்படாத சிகிச்சை முறைகளை பற்றி பொதுவெளியில் பேசும்போது, மக்கள் புரிந்து கொள்ளாமல் பின்பற்றுகிறார்கள். எந்தவொரு தோல் மருத்துவரும் இத்தகைய சிகிச்சையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்" என்கிறார்.
ஆனால் சில நாட்டு மருத்துவர்கள் தங்கள் பதிவில் "தமன்னா சொல்வது சரிதான். மனிதனுடைய உமிழ்நீரில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அது சிறிய வகை புண்களை சரி செய்யக்கூடியது. மருத்துவம் வளராத காலத்தில் மனிதர்கள் காயங்களை ஆற்றுவதற்கு உமிழ்நீரைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்" என்கிறார்கள்.