தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

அரண்மனை 4 படத்திற்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. அதேபோல் தெலுங்கிலும் ஒடேலா-2 படத்திற்கு பிறகு புதிய படங்கள் இல்லாத நிலையில் தற்போது ஹிந்தியில் ரோமியோ, ரேஞ்சர், விவன் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். தமன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நான் நடித்தபோது எந்த படமும் என்னை பேச வைக்கவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் நடித்த பத்ரிநாத் என்ற படத்தில் நடித்த பிறகு எனது நடனத்தை பார்த்து பல இயக்குனர்களும் சிறப்பு பாடல்களில் நடனமாட எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்படி தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடனமாடிய பாடல்கள் தான் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தி உள்ளன. அதனால் தொடர்ந்து சிறப்பு பாடல்களில் நடனம் ஆடுவதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.




