ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தன். ஒரு காலத்தில் அங்கு முன்னணி நடிகராக இருந்தார். ரஜினிக்கு நெருக்கமான இவர் ரஜினியுடன் 'விடுதலை' படத்தில் நடித்தார். அதை கே.பாலாஜி தயாரித்தார். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'குர்பானி' படத்தின் ரீமேக் இது. அதன்பிறகு ரஜினி நடித்த 'ஸ்ரீராகவேந்தர்' படத்திலும், லட்சுமி இயக்கிய 'மழலை பட்டாளம்' படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
தமிழில் அவர் ஹீரோவாக நடித்த ஒரே படம் 'அலைகள்'. இதுதான் தமிழில் அவருக்கு முதல் படமும் அது தான். அவருடன் சந்திரலேகா, சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் 'துளசி' என்ற படத்தைத் தயாரிக்க ஸ்ரீதர் முடிவு செய்தார், அதில் தமிழில் ஏ.வி.எம். ராஜனும், தெலுங்கில் சோபன் பாபுவும் நடிப்பதாக இருந்தது. 4 ஆயிரம் அடி படம் தயாரான பிறகு இந்த கதையின் மீது ஸ்ரீதருக்கு சந்தேகம் வந்தது. இதனை மக்கள் ஏற்பார்களா என்று கவலைப்பட்டார். இதனால் படத்தை கைவிட்டார்.
பின்னர் இந்த கதையில் சில மாற்றங்களை செய்து அவர் இயக்கிய படம்தான் 'அலைகள்'. ஏவிஎம் ராஜன் வேறு படங்களுக்கு சென்று விட்ட நிலையில் கன்னடத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த விஷ்ணுவர்தனை அழைத்து வந்து நடிக்க வைத்தார். இந்த படம் வெற்றி பெறாததால் விஷ்ணுவர்தன் தமிழில் தொடர்ந்து நடிக்கவில்லை. குற்றங்களுக்காக ஜெயிலுக்கு சென்று வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியின் கதை.