அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
1963ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான படம் 'பார் மகளே பார்'. தமிழில் நடத்தப்பட்டு வந்த 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற நாடகம், அதே பெயரில் சினிமா ஆனது. சிவாஜியுடன் சவுகார் ஜானகி, முத்துராமன், விஜயகுமாரி, ஏ.வி.எம் ராஜன், புஷ்பலதா, குமாரி ருக்மணி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா, சோ, மனோரமா என பலர் நடித்தனர்.
படத்தை இயக்கிய பீம்சிங் நாடகத்தில் இருந்து பல மாற்றங்களை செய்தார். படத்தின் தலைப்பையும் 'பெற்றால்தான் பிள்ளையா' என்பதை மாற்றி தனது ப வரிசை டைட்டிலாக வைக்க வேண்டும் என்பதற்காக 'பார் மகளே பார்' என்று மாற்றினார். படத்தில் இடம்பெறும் 'பார் மகளே பார்' பாடல் மிகவும் பிடித்து விட்டதால் அதையே தலைப்பாகவும் வைத்தார்.
1966ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் உருவான படம் 'பெற்றால்தான் பிள்ளையா'. இந்த படத்தில் எம்ஜிஆருடன் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, அசோகன், தங்கவேலு, நம்பியார் உள்பட பலர் நடித்தனர். இந்த படத்திற்கும் பல தலைப்புகள் யோசிக்கப்பட்ட பிறகு எம்ஜிஆர்தான் இந்த தலைப்பை வைத்தார். இந்த படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார்கள்.