'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
நடிகர் மாதவன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்தி படங்கள், வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். தற்போது ‛ஆப் ஜெய்சா கோய்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக தங்கல் பட புகழ் பாத்திமா சனா ஷேக் நடித்திருக்கிறார். விவேக் சோனி இயக்கி உள்ளார். இந்தவாரம் ஜூலை 11ல் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சமீபத்தில் மாதவனை சந்தித்தபோது அவர் அளித்த பேட்டி....
‛ஆப் ஜெய்சா கோய்' படம் பற்றி கூறுங்கள்?
மனிதநேயம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி இப்படம் பேசுகிறது. வயது இடைவெளி காதல் தான் படத்தின் ஒரு வரிக்கதை. இந்தக் கதை உறவுகளின் ஆழம், சமூகத்தில் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டும். நிச்சயமாக ரசிகர்களை சிந்திக்க வைக்கும்.
இந்த படத்தில் உங்கள் வேடத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டீங்க அல்லது மெனக்கெட்டீங்க.?
இதில் என் கேரக்டர் பெயர் ஸ்ரீ ரேணு, சமஸ்கிருத ஆசிரியர். வெளியிலிருந்து பார்ப்பதற்கு என் ரோல் கடினமானவராகவும், உள்ளே மிகவும் உணர்ச்சி வசப்படுபவராகவும் அமைந்துள்ளது. இதில் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது. கதையை படித்து, கேரக்டரை புரிந்து, இயக்குனர் உடன் அதிக நேரம் செலவிட்டு நடித்தேன். வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் புறக்கணிக்கும் நபர்கள்தான் நம்மை அதிகம் புரிந்து கொள்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் உங்களுக்கு புரிய வைக்கும்.
பாத்திமா சனா ஷேக் உடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பாத்திமா திறமையான, அர்ப்பணிப்புள்ள ஒரு சிறந்த நடிகை, தனது பாத்திரத்தை சிறப்பாக செய்ய கடுமையாக உழைக்கிறார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அவரது எனர்ஜி லெவல் எப்போதும் அற்புதமானது.
ஆண்களை விட பெண்களுக்கு உங்களை அதிகம் பிடிக்கிறது. அதுபற்றி உங்கள் கருத்து?
இல்லை, இல்லை அது உண்மையல்ல. பெண்கள் தான் என்னை அதிகம் விரும்புவதாக முன்பு நானும் நினைத்தேன். பின்னர் ஒரு நாள், நான் எனது சமூகவலைதளத்தை பார்த்தபோது என்னைப் பின்தொடர்பவர்களில் பெரும்பாலோர் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதையும், அவர்களில் 75 சதவீதம் பேர் ஆண்கள் என்பதையும் கண்டறிந்தேன். இந்த 75 சதவீத ஆண்கள் என் பதிவுகளுக்கு ஒருபோதும் கருத்து தெரிவிப்பதில்லை. அவர்கள் அமைதியாக என் பதிவுகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மறுபுறம், எனது ரசிகர்களில் 25 சதவீத பெண்கள், எனது பதிவுகளில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மாதவன் தெரிவித்தார்.