சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் மும்பை, கோல்கட்டா, சென்னை போன்றவைதான் திரைப்படத் தயாரிப்புகளுக்கான முக்கிய நகரங்களாக இருந்தன. அதன்பின் மொழிவாரியாக அந்தந்த மாநிலங்களில் திரைப்படத் துறை தனி வளர்ச்சி அடைந்தது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் சென்னையை பின்னுக்குத் தள்ளி ஐதராபாத் முன்னேறியது. பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்போது தமிழ்ப் படங்களின் பூஜைகள் கூட சென்னையில் நடக்காமல் ஐதராபாத்தில் நடக்கும் அளவிற்குப் போய்விட்டது. இதை தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்கள், பிரபலங்கள் கூட கண்டு கொள்வதில்லை. சென்னை மீதான அவர்களது பாசம் எங்கே போனதென்று தெரியவில்லை.
இதனிடையே, பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை டில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தெலுங்கானாவில் அனைத்து வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை நிர்மாணிக்கும் தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தெலுங்கானா மாநிலத்தில் திரைப்படத் துறையை வளர்ப்பதில் தனது அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் சென்னை அருகே பூந்தமல்லியில் அனைத்து வசதிகளையும் கொண்ட 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் ஒன்றை நிர்மாணிக்க கடந்த ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், இங்குள்ள டாப் நடிகர்கள் யாருமே சென்னையில் திரைப்படத் துறையை வளர்க்க ஒரு ஸ்டுடியோவைக் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியதில்லை.