மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான 'நான் ஈ' சுதீப் நடிக்க உள்ள அவரது 47வது படத்தை கடந்த வருடம் சுதீப் வெளிவந்து வெற்றி பெற்ற 'மேக்ஸ்' படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயா இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை தமிழ் இயக்குனரான சேரன் முதலில் இயக்குவராக இருந்தது. தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதீப்பின் பிறந்தநாளில் வெளியானது.
சில காரணங்களால் சேரன் - சுதீப் கூட்டணி இணைந்து பணியாற்ற முடியவில்லை என்று சொல்கிறார்கள். அதனால், தான் விஜய் கார்த்திகேயவை அந்தப் படத்தை இயக்கும்படி ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
சுதீப் தற்போது 'பில்லா ரங்கா பாட்ஷா' என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகிறார். சேரன் வேறு ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளாராம்.