ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
மலையாள சீனியர் நடிகரான சுரேஷ்கோபி கடந்த 10 வருடங்களில் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்று தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இதற்கிடையே, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அந்த வகையில் இவர் நடிப்பில் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) என்கிற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் படத்தின் டைட்டிலை மாற்றக் கூறி சென்சார் கெடுபிடி காட்டியதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் அவர் ஏற்கனவே நடித்து வந்த ஒத்தக் கொம்பன் திரைப்படம் கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இந்த முறை கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள பாலா என்கிற ஊரில் நடக்கும் கிராம திருவிழா காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இதற்காக ஒரு திருவிழாவையே செயற்கையாக உருவாக்கி செட் போடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ஜெயன்ட் வீல் ராட்டணம், மரணக் கிணற்றில் பைக் ஓட்டுதல் மற்றும் மிகப்பெரிய சர்ச் என ஒரு திருவிழாவில் இடம் பெறும் அனைத்து அம்சங்களும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. இன்று (ஜூன் 28) முதல் இங்கு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. வரும் ஜூலை 5ஆம் தேதி வரை இங்கே படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 3000 துணை நடிகர்கள் பங்கு பெற அவர்களுடன் இணைந்து சுரேஷ் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்..