இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? | விஷ்ணு விஷால் அடுத்தடுத்து தயாரிக்கும் 3 படங்கள் | சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி : தனுஷ் தரப்பில் திடீர் எதிர்ப்பு ? | நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி | கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? |
ஒரு கோவிலுக்கு சொந்தமாக யானை இருப்பது பெருமையாக கருதப்பட்டது. ஆனால் தற்போது விலங்கின ஆர்வலர்கள் யானைகளை கோவிலில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு கோவில் யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. பல கோவில்கள் யானையின் பராமரிப்பு செலவு சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது.
இந்து நிலையில் தற்போது கோவில் வாசலில் இயந்திர யானைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பார்ப்பதற்கு நிஜமான யானை தோன்றும் இவற்றுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் இருக்கிறது.
இந்த நிலையில் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை திரிஷா வழங்கியுள்ளார். இந்த இயந்திர யானைக்கு "கஜா" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீச்சி அடிப்பதோடு ஆசிர்வாதமும் வழங்குகிறது. இந்து யானையை அந்த பகுதி மக்கள் 'திரிஷா யானை என்று குறிப்பிடுகிறார்கள்.