ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
ஒரு கோவிலுக்கு சொந்தமாக யானை இருப்பது பெருமையாக கருதப்பட்டது. ஆனால் தற்போது விலங்கின ஆர்வலர்கள் யானைகளை கோவிலில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு கோவில் யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. பல கோவில்கள் யானையின் பராமரிப்பு செலவு சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது.
இந்து நிலையில் தற்போது கோவில் வாசலில் இயந்திர யானைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பார்ப்பதற்கு நிஜமான யானை தோன்றும் இவற்றுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் இருக்கிறது.
இந்த நிலையில் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை திரிஷா வழங்கியுள்ளார். இந்த இயந்திர யானைக்கு "கஜா" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீச்சி அடிப்பதோடு ஆசிர்வாதமும் வழங்குகிறது. இந்து யானையை அந்த பகுதி மக்கள் 'திரிஷா யானை என்று குறிப்பிடுகிறார்கள்.