டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மறைந்த நடிகர் விஜயகாந்த் இளையமகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் படை தலைவன். இந்த படத்தில் விஜயகாந்த் மகனுக்கு உதவ, படத்தின் விளம்பரத்துக்காக முன்னணி நடிகர்கள், வேறு சிலர் நடித்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி யாரும் நடிக்கவில்லை. விஜயகாந்த் மகனுக்கு உதவுவேன் என்று சொன்ன லாரன்ஸ் கூட இல்லை.
இது குறித்து சண்முக பாண்டியனிடம் கேட்கப்பட அவரோ, ''லாரன்ஸ் உதவுவதாக சொன்னார். ஆனால், அதற்குள் பெரும்பாலான காட்சிகளை எடுத்துவிட்டோம். மற்றபடி சசிகுமார், கார்த்தி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்' என்றார்.
விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சிக்காக அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் வேண்டுகோளுக்காக செந்துார பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். ஆனால், இந்த பட சமயத்தில் சண்முக பாண்டியனை விஜய் கண்டு கொள்ளவில்லை. சண்முகபாண்டியன் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்தவில்லை. படத்தின் டிரைலர், பாடல்கள் என எதையும் தனது சோஷியல் மீடியாவில் கூட பகிரவில்லை.
நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்த, பல நடிகர்களுக்கு உதவிய விஜயகாந்த் மகன் படத்துக்கு முன்னணி நடிகர்கள், மூத்த சினிமாகாரர்கள் உதவில்லை, வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. பல்வேறு சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மத்தியில் தடைகளை தாண்டி இந்த படம் வந்துள்ளது. படம் ரிலீஸ் ஆக, சண்முக பாண்டியன் தாய் மாமா எல்.கே சுதீஷ்தான் அதிகம் உதவினார். அவரே உலகம் முழுக்க தனது பேனரில் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த்தால் நேரடி, மறைமுக உதவி பெற்ற பல நடிகர், நடிகைகள் இந்த விஷயத்தில் கப்சிப்.




