'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
"புது ராகம் படைப்பதாலே... நானும் இறைவனே...'' இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இன்றும், தொலைதுாரம் பயணிப்போருக்கும். இரவுகளில் உறக்கம் வராமல் தவிப்போருக்கும், தோழனாய் தோள் கொடுப்பது இளையராஜாவின் இசையே. ஒரு தமிழனாய், இந்தியனாய், நமது இசையை உலகம் முழுக்க உச்சரிக்க செய்தவர். பத்ம விபூஷண் விருதைப் பெற்று உச்சத்தை தொட்டிருக்கிறார். 80 வயதில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இளையராஜா. இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்தாண்டு இளையராஜாவிற்கு ஸ்பெஷல் பிறந்தநாள் என்றே சொல்லலாம். காரணம் சிம்பொனி இசையை அமைத்த பின் அவர் கொண்டாடும் பிறந்தநாள் இதுவாகும். பொதுவாக தனது பிறந்தநாளின் போது இளையராஜா சென்னையில் இருந்தால் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். அதன்படி சென்னையில் உள்ள தனது ஸ்டுடியோவில் காலை முதல் ரசிகர்களை சந்தித்தார் இளையராஜா. காலை கோடம்பாக்கம் ஸ்டூடியோவுக்கு வந்தபோது வாசலில் கூடியிருந்த ரசிகர்கள் வாழ்த்து மழை தெரிவித்தனர். பின்னர் ஸ்டூடியோவில் திரையுலகினர், நண்பர்கள் வாழ்த்தை அவர் ஏற்றுக்கொண்டார். கேக் வெட்டி பிறந்தநாளையும் கொண்டாடினார். ரசிகர்கள் மட்டுமின்றி ராமராஜன் போன்ற திரையுலகினரும் அவருக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.,வின் அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாயெல்லாம் அடைத்துவிட்டது
இளையராஜா கூறுகையில், ‛‛வாயெல்லாம் அடைத்துவிட்டது. வார்த்தைகள் வரவில்லை. அடேயப்பா என்ன அன்பு. என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல ரயில், பஸ், ஆட்டோ கிடைக்காமல் போராடி இங்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி. சிலர் தூக்கம் இல்லாமல் வந்து இருக்கிறார்கள். சிலர் என்னை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு வாரமாக தூங்காமல் தவித்து இருக்கிறார்கள். ஆண்டவன் அருளாசியுடன் என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி'' என தெரிவித்தார்.