ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் |
நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகளான தியா சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தார். அதேசமயம் அந்த இரண்டு புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தை உடனடியாக நீக்கியும் விட்டார். இதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் பலர் குழம்பி வந்தனர்.
இந்த நிலையில் முதல் புகைப்படத்தில் நடிகர் சூர்யா தாடியுடன் காணப்படுகிறார். இன்னொரு புகைப்படத்தில் அதே உடையுடன் தாடியை எடுத்துவிட்டு சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திர கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்த நெட்டிசன் ஒருவர் இரண்டையும் வெளியிட்டு, சூர்யா சிங்கம் 4 படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதற்காகத்தான் இந்த கெட்டப் என்றும், அது வெளியில் தெரிந்து விட்டால் படம் குறித்த தகவல் கசிந்துவிடும் என்பதால் உடனடியாக ஜோதிகா அந்த படத்தை நீக்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்த இரண்டு புகைப்படங்களையும், அதில் ஒன்றை ஜோதிகா நீக்கியதையும் பார்க்கும்போது அது சரிதானோ என்று தோன்றுகிறது.