‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகளான தியா சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தார். அதேசமயம் அந்த இரண்டு புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தை உடனடியாக நீக்கியும் விட்டார். இதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் பலர் குழம்பி வந்தனர்.
இந்த நிலையில் முதல் புகைப்படத்தில் நடிகர் சூர்யா தாடியுடன் காணப்படுகிறார். இன்னொரு புகைப்படத்தில் அதே உடையுடன் தாடியை எடுத்துவிட்டு சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திர கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்த நெட்டிசன் ஒருவர் இரண்டையும் வெளியிட்டு, சூர்யா சிங்கம் 4 படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதற்காகத்தான் இந்த கெட்டப் என்றும், அது வெளியில் தெரிந்து விட்டால் படம் குறித்த தகவல் கசிந்துவிடும் என்பதால் உடனடியாக ஜோதிகா அந்த படத்தை நீக்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்த இரண்டு புகைப்படங்களையும், அதில் ஒன்றை ஜோதிகா நீக்கியதையும் பார்க்கும்போது அது சரிதானோ என்று தோன்றுகிறது.