கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' | பிளாஷ்பேக்: தமிழில் 2 படங்கள் மட்டுமே இயக்கிய விட்டலாச்சார்யா | சிறிய படங்களுடனே முடிவுக்கு வரும் கோடை விடுமுறை | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் ஆசையை பூர்த்தி செய்த “தர்மம் எங்கே?” |
அட்டக்கத்தி, பீட்சா, தெகிடி உட்பட பல படங்களின் எடிட்டிரான லியோ ஜான்பால் இயக்கும் மார்கன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்த மாதம் படம் ரிலீஸ். அவரே தயாரித்து, இசையமைத்தும் உள்ளார். அவருடைய சகோதரி மகன் அஜய் இதில் வில்லன்.
சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, இது நான் நடிக்கும் 26வது படம், பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். பல படங்களை தயாரித்து இருக்கிறேன். அடுத்தும் சில படங்களை தயாரிக்கப்போகிறேன். ஆனாலும், கடன் வாங்கிதான் படம் தயாரிக்கிறேன். இப்போதும் வட்டிக்கட்டிக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில் ''நான் எத்தனை படங்கள் நடித்தாலும் பிச்சைக்காரனை மறக்க முடியாது. என்னை டிஷ்யூம் படத்தில் அவர்தான் இசையமைப்பாளர் ஆக்கினார். அவரை மறக்கமாட்டேன். மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன். அந்த படத்திலும் என் மருமகன் அஜய்க்கு முக்கியமான வேடம்' என்றார்.
மார்கன் படத்தில் ஆந்தை, ஆமை முக்கியமான பாத்திரமாக வருவதால், சென்னையில் நடந்த விழா மேடையிலும் ஆந்தை, ஆசை உருவகங்களை விஜய் ஆண்டனி வைத்து இருந்தார். ஆமை, அமீனா குறித்து பல மூட நம்பிக்கைகள் இருக்கிறது. அதை தவிர்க்கவே மேடையில் இதை செய்தேன்' என்றார் விஜய் ஆண்டனி.