காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் லியோ ஜான் பால். இவர் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வந்தார். இந்த படத்திற்கு ‛ககன மார்கன்' என பெயரிட்டுள்ளனர். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருளாம்.
இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஒரு மர்மமான கொலையை பின்னணியாக வைத்து கிரைம் திரில்லர் படமாக இல்லாமல் புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான புலனாய்வு படமாக உருவாகி வருகிறது. படத்தில் அண்டர் வாட்டர் தொடர்பான முக்கிய காட்சி உள்ளதால் அதனை மும்பையில் வைத்து படமாக்கி உள்ளனர்.
அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்கள். தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி இசையமைத்து, தயாரித்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உளள நிலையில் மற்ற பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.