கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி நடித்த மாமன் படம் வெற்றி அடைந்துள்ளது. நேற்றுவரை 32 கோடியை தாண்டி வெற்றி படமாகி உள்ளது. இது குறித்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், 'உண்மையில் ஆரம்பத்தில் மாமன் படத்துக்கு மீடியாவில் கலவையான விமர்சனங்கள் வந்தது. சென்டிமென்ட் அதிகம் என்றார்கள். ஆனால், அது பற்றி கவலைப்படாமல் படத்தை நன்றாக பிரமோட் செய்தார் சூரி. ஒவ்வொரு ஊராக போய் பேசினார். நல்ல படம் எடுத்து இருக்கிறோம் பாருங்க என்றார். மக்கள் படத்தில் ஏதோ இருக்கிறது என்று வந்தார்கள். படம் இப்ப ஹிட்' என்றார். தனது பணியை நிறைவாக செய்துவிட்ட சூரி, இப்போது குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா டூரில் இருக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் அவர் வந்தவுடன் படத்தின் வெற்றி விழா நடக்க உள்ளது. டூரிஸ்ட் பேமிலியை தொடர்ந்து மாமன் படமும், சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கதைக்காக ஓடியது, கோலிவுட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.