நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகர் ரவிமோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ரவிமோகனுக்கும் பாடகி கெனிஷாக்கும் இடையிலான உறவு வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பிறகு இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. ரவிமோகன், ஆர்த்தி, கெனிஷா ஆகிய மூவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டனர்.
சமூக வலைதளங்களை பொறுத்தவரை பெரும்பாலோனார் ஆர்த்திக்கு ஆதரவாக உள்ளனர். நல்ல குடும்பத்திற்குள் புகுந்து கெடுப்பதாக கெனிஷா மீது விமர்சனம் செய்து வருகிறார்கள். அதோடு சில நெட்டிசன்கள் எல்லை மீறி கெனிஷாவுக்கு பாலியல் மிரட்டல், கொலை மிரட்டல் கூட விடுத்துள்ளனர். இந்த நிலையில் தனக்கு பலாத்கார மிரட்டல், கொலை மிரட்டல் விடுத்து போடப்பட்ட கமெண்ட்டுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு 'கடவுளே இதை எல்லாம் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன்' என்றார். மேலும் 'நான் தவறு செய்திருந்தால் நீ என்னை எரித்துவிடு இறைவனே' என்று பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் கெனிஷாவிற்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் கெனிஷா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'தன்னை பற்றி வெளியான செய்திகள், வீடியோக்கள், மோசமான கமெண்ட்டுகள், மோசமான புகைப்படங்கள் ஆகியவற்றை 48 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.