செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
புதுமுகங்கள் இணைந்து கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கி உள்ள படம் 'மனிதர்கள்'. ராமு இந்திரா இயக்கி உள்ளார். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் உதவியாளர், அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மலையாள இசை அமைப்பளார் அனிலேஷ் எல் மேத்யூ தமிழில் அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் ராமு இந்திரா கூறும்போது, "எளிய மனிதர்களை வைத்து ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரில்லர் படமாக உருவாகி உள்ளது. 6 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கிறார்கள். அப்போது மிகப்பெரிய சிக்கல் ஒன்று நேருகிறது. அவர்களுக்கு என்ன ஆனது, அதிலிருந்து மீண்டார்களா என்பதுதான் படத்தின் கதை. காலமும், சூழலும் மனிதர்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதை உணர்த்தும் படமாக இருக்கும். கதைக்கு தேவைப்படாததால் படத்தில் பெண் கதாபாத்திரம் இல்லை" என்றார்.