ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
புதுமுகங்கள் இணைந்து கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கி உள்ள படம் 'மனிதர்கள்'. ராமு இந்திரா இயக்கி உள்ளார். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் உதவியாளர், அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மலையாள இசை அமைப்பளார் அனிலேஷ் எல் மேத்யூ தமிழில் அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் ராமு இந்திரா கூறும்போது, "எளிய மனிதர்களை வைத்து ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரில்லர் படமாக உருவாகி உள்ளது. 6 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கிறார்கள். அப்போது மிகப்பெரிய சிக்கல் ஒன்று நேருகிறது. அவர்களுக்கு என்ன ஆனது, அதிலிருந்து மீண்டார்களா என்பதுதான் படத்தின் கதை. காலமும், சூழலும் மனிதர்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதை உணர்த்தும் படமாக இருக்கும். கதைக்கு தேவைப்படாததால் படத்தில் பெண் கதாபாத்திரம் இல்லை" என்றார்.