Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாதுகாப்பு கேட்டு கவுதமி போலீசில் புகார்

15 மே, 2025 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Gautami-files-police-complaint-seeking-protection


1980களில் முன்னணியில் இருந்தவர் நடிகை கவுதமி. சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சில படங்களிலும் நடிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்தார். தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அக்கட்சியில் கொள்கை பரப்பு இணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் தனக்கு சொந்தமான 9 கோடி மதிப்புள்ள சொத்தை தன்னிடம் பணியாளராக இருந்த அழகப்பன், மோசடி செய்து அபகரித்து விட்டதாகவும், சட்டவிரோதமாக அனுமதி பெற்று கட்டடம் கட்டி வருவதாகவும் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி அந்த இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுதமி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் சிலர் என்னிடம் 96 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள்.மேலும், வக்கீல்கள் என்ற போர்வையில் 'வாட்ஸ்-அப்' மூலம் என்னை சிலர் மிரட்டுகிறார்கள். நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகிறார்கள்.

எனக்கு மிரட்டல் விடுக்கும் அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மூலம் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், அதனால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்று புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எழுத்தாளராக சத்யராஜ் நடிக்கும் மெட்ராஸ் மேட்னிஎழுத்தாளராக சத்யராஜ் நடிக்கும் ... தமன்னாவை மறந்த தமிழ் சினிமா தமன்னாவை மறந்த தமிழ் சினிமா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in