என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் | வாடிவாசல் : வெற்றிமாறன் பேச்சிலும் குழப்பம் | சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல் | கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த நிமிஷா | நடிச்சா ஹீரோ தான்... 3 படங்கள் ஹிட் : பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி | ‛வட சென்னை 2'... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல்' டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம் | 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக வதந்திகளை மறுத்த தயாரிப்பாளர் | ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் |
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு 'கோலி சோடா' படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் விஜய் மில்டன் இயக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். ரப் நோட் புரொடக்ஷன் தயாரிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக "புரொடக்ஷன் நம்பர் 5" என வைக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து விஜய் மில்டன் கூறுகையில் “இது எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார். தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.