ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
நடிகர் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார். இதற்கு ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் நெருக்கமாக பழகி வருவது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. நீதிமன்றத்தில் இவர்கள் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகின்றது. அவ்வப்போது ரவி மோகனின் மனைவி ஆர்த்தி சோசியல் மீடியாவில் தனது கணவர் குறித்தும், தன் பக்கம் உள்ள நியாயங்கள் குறித்தும் சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். சமீபத்தில், ஐசரி கணேஷ் மகளின் திருமணத்திற்கு கெனிஷாவுடன் ஜோடியாக வருகை தந்தார் ரவி மோகன். இது திரையுலகினர், ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி இவர்களின் இந்த ஜோடியான வருகை குறித்து விமர்சிக்கும் விதமாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். நடிகைகள் ராதிகா, குஷ்பு போன்றவர்கள் ஆர்த்திக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ஆர்த்தியின் பதிவுக்கு பதிலடி தருவது போல தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கெனிஷா.
அதில் அவர் கூறும்போது, “ஒரு ஆண்மையுள்ள ஆண் ஒருபோதும் குழப்பமான உணர்ச்சி ஆற்றலால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியை உணரும் பெண்ணின் பக்கம் சாய்கிறது.. மென்மை என்பது ஒரு செயல்திறன் அல்ல, ஆனால் ஒரு அமைதியான சக்தி.. அவள் அவனது வலிமையுடன் போட்டியிடுவதில்லை, ஆனால் அதை சமநிலைப்படுத்துகிறாள்.. அந்த இயக்கத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்”. கூறியுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் இரு தரப்பினர் இடையே வார்த்தை போர துவங்கியுள்ளது என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.