ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

சேலம் : 'திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி, நடிகர்கள் சந்தானம், ஆர்யா பாடல் உருவாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் பா.ஜ., கிழக்கு மாவட்ட செயலரும், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவருமான அஜீத், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
ஹிந்து மக்களால் புனிதமாக கருதப்படும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் கோவில். ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக, டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில், 'கோவிந்தா கோவிந்தா கிசா 47...' என்ற பாடலை பாடி, வெளியிட உள்ளனர்.
அதில், பெருமாளையும், அவர் இருக்கும் புனித தலமான திருப்பதி கோவிலையும் அசிங்கப்படுத்தி, நடிகர்கள் சந்தானம், ஆர்யா உள்ளிட்டோர் பாடல் உருவாக்கியுள்ளனர். அந்த பாடலில், 'பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா...' என பெருமாளை அவமதிக்கும் வகையில் பாடி உள்ளனர்.
வாய்மொழியாகவும், செய்கையாகவும், மத வழிபாடு, சடங்குகளை தவறாக சித்தரித்து பாடிய சந்தானம், ஆர்யா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.




