பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
பிறப்பு முதல் இறப்பு வரை இசை ஒன்றையே மூச்சுக் காற்றாய் சுவாசித்து, இன்றும் காற்றினில் கீதமாய் நம்மில் கலந்திருப்பவர்தான் 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மி. இசையுலகால் அரவணைக்கப்பட்டு, வெள்ளித்திரையின் வெளிச்சம் கண்டு இவர் நட்சத்திரமாய் மின்ன காரணமாய் அமைந்த திரைப்படம்தான் “ஸேவாஸதனம்”. வக்கீல் தொழிலை விட்டு விட்டு, கலையுலகில் கால் பதித்து, சினிமா என்ற சிங்காரக் கோட்டையில் புகழ் பெற்று விளங்கியவர் இயக்குநர் கே சுப்ரமணியம்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் வெகு விமரிசையாக கொண்டாடி வரும் 'மகாமகம்' திருவிழாவின் கலைநிகழ்ச்சிகள் அமைப்பாளராகவும் இருந்து வந்த இயக்குநர் கே சுப்ரமணியத்திடம் நடிகையும், அவரது வாழ்க்கைத் துணையுமான நடிகை எஸ் டி சுப்புலக்ஷ்மி, ஒரு இளம் பாடகியை இயக்குநர் கே சுப்ரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளம் பாடகியை கும்பகோணம் 'மகாமகம்' பொருட்காட்சியின் கலைநிகழ்ச்சியில் பாடவும் வைத்தார் இயக்குநர் கே சுப்ரமணியம்.
அந்த இளம் பாடகியின் குரல் கேட்டு, மக்களோடு இணைந்து இயக்குநர் கே சுப்ரமணியமும் கிரங்கித்தான் போனார். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டாவது முறையாக அதே நிகழ்ச்சியை வேறு ஒரு நாள் நடத்த வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. கேட்போரைத் தன் இசையால், தன் குரலினிமையால் மயங்கச் செய்த அந்த இளம் பாடகிதான் 'இசையரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மி.
பிரேம்சந்த் என்பவர் எழுதிய ஒரு நாவலை, பிரபல சமூக சேவகியான அம்புஜம் அம்மாள் தமிழில் மொழி பெயர்த்து எழுதி வர, அது ஒரு வார இதழில் தொடர்கதையாகவும் வந்து கொண்டிருக்க, அந்தக் கதையை சினிமாவாக எடுக்க இயக்குநர் கே சுப்ரமணியம் ஆசை கொண்டார். உடனே நான்காயிரம் ரூபாய் கொடுத்து, அதை திரைப்படமாக்கும் உரிமையையும் பெற்றார். அந்நாளில் கதைக்காகக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இது என்று ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.
கும்பகோணம் 'மகாமகம்' பொருட்காட்சியில் பாடி, தனது குரலினிமையால் பலரது இதயங்களைக் கவர்ந்த எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களை அந்தக் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் கே சுப்ரமணியம். அந்தப்படம்தான் “ஸேவாஸதனம்”. சமூக பிரச்னைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், அமெச்சூர் நாடக நடிகரான எப் ஜி நடேசய்யர் வயதான முதியவராகவும், வாழ்வின் தவிர்க்க முடியாத நிர்பந்தங்களால் அவருக்கு இரண்டாம் தாரமாக வந்து சேரும் இளம் பெண் கதாபாத்திரத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மியும் நடித்திருந்த “ஸேவாஸதனம்” திரைப்படம் 1938ம் ஆண்டு மே மாதம் திரைக்கு வந்தது.