ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பல சங்கங்களில் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கென முக்கியமான நான்கு சங்கங்கள் உள்ளன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இவற்றில் எந்த ஒரு சங்கத்திலாவது தயாரிப்பாளர் ஆகப் பதிவு செய்த பிறகு திரைப்படங்களைத் தயாரிக்கலாம்.
ஆனால், படங்களின் வெளியீடு என்று வரும் போது இந்த சங்கங்கள் அதை ஒழுங்குபடுத்தும் ஒரு நடைமுறையை இதுவரையில் செய்யாதது பல தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வெளியீட்டுத் தேதியை முன்னரே சொல்லி அதற்கேற்றபடி படங்களை வெளியீடு செய்யும் ஒரு முறையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடைபிடித்து வந்தது. கொஞ்ச நாட்கள் மட்டும் நடந்து அதன்பின் அதுவும் காணாமல் போனது.
இருக்கும் முக்கியமான தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய படங்களின் வெளியீடுகளில் ஒரு ஒழுங்கு நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகத்திலேயே நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், அதை செயல்படுத்த சம்பந்தப்பட்ட சங்கங்கள் முயற்சிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
நாளை மே 9ம் தேதி “அம்பி, எமன் கட்டளை, என் காதலே, கஜானா, கீனோ, நிழற்குடை, சவுடு, வாத்தியார் குப்பம், யாமன்,” ஆகிய 9 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் பிப்ரவரி மாதத்திலும், மார்ச் மாதத்திலும் 9 படங்கள் ஒரே நாளில் வெளியாகின. மீண்டும் இப்போது அதுபோல வெளியாக உள்ளது. அடுத்து இப்படி ஒரு நிலை வராமல் தடுக்க திரையுலகினர் ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும் என்பதே சிறிய படத் தயாரிப்பாளர்களின் நிலையாக உள்ளது.