அஜித்துக்கு என்னாச்சு : இப்படி மாறிட்டாரே? | போதைப் பொருள் வழக்கு : தமிழ்த் திரையுலகில் பரபரப்பு… | சுரேஷ் கோபி பட டைட்டிலை சென்சார் மாற்ற சொன்னதன் காரணம் இதுதான் | ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்ருதிஹாசனின் எக்ஸ் கணக்கு | கிச்சா சுதீப்பின் பேச்சுக்கு கர்நாடக துணை முதல்வர் பதில் | ‛பேட்ரியாட்' டைட்டிலை உறுதி செய்த மோகன்லால் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது : நீதிமன்றத்தில் கேரள போலீஸார் மனு | குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன் : போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர் | திருக்குறள் படத்தை முதல்வர் பார்ப்பாரா? | நியூயார்க் திரைப்பட விழாவில் அங்கம்மாளுக்கு கவுரவம் |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பல சங்கங்களில் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கென முக்கியமான நான்கு சங்கங்கள் உள்ளன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இவற்றில் எந்த ஒரு சங்கத்திலாவது தயாரிப்பாளர் ஆகப் பதிவு செய்த பிறகு திரைப்படங்களைத் தயாரிக்கலாம்.
ஆனால், படங்களின் வெளியீடு என்று வரும் போது இந்த சங்கங்கள் அதை ஒழுங்குபடுத்தும் ஒரு நடைமுறையை இதுவரையில் செய்யாதது பல தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வெளியீட்டுத் தேதியை முன்னரே சொல்லி அதற்கேற்றபடி படங்களை வெளியீடு செய்யும் ஒரு முறையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடைபிடித்து வந்தது. கொஞ்ச நாட்கள் மட்டும் நடந்து அதன்பின் அதுவும் காணாமல் போனது.
இருக்கும் முக்கியமான தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய படங்களின் வெளியீடுகளில் ஒரு ஒழுங்கு நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகத்திலேயே நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், அதை செயல்படுத்த சம்பந்தப்பட்ட சங்கங்கள் முயற்சிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
நாளை மே 9ம் தேதி “அம்பி, எமன் கட்டளை, என் காதலே, கஜானா, கீனோ, நிழற்குடை, சவுடு, வாத்தியார் குப்பம், யாமன்,” ஆகிய 9 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் பிப்ரவரி மாதத்திலும், மார்ச் மாதத்திலும் 9 படங்கள் ஒரே நாளில் வெளியாகின. மீண்டும் இப்போது அதுபோல வெளியாக உள்ளது. அடுத்து இப்படி ஒரு நிலை வராமல் தடுக்க திரையுலகினர் ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும் என்பதே சிறிய படத் தயாரிப்பாளர்களின் நிலையாக உள்ளது.