மாமன் பட டிரைலர் : ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏற்பட்ட பயம் | பாலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்தும் ஸ்ரீலீலா | ஆபரேஷன் சிந்தூர் - பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண் | கவுதம் மேனன் இயக்கத்தில் சந்தானம்? | ரெட்ரோ படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் பற்றிய அப்டேட் | படக்குழுவுக்கு இரண்டாவது முறையாக பிரேக் கொடுத்த ராஜமவுலி | தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்? : சமந்தா வெளியிட்ட தகவல | 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் கோவை சரளா | மும்பையில் அமீர்கானை சந்தித்த அல்லு அர்ஜுன் | 'ஆபரேஷன் சிந்தூர்' : சினிமா பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ரெட்ரோ'. படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தும், ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை. நெகட்டிவ்வான விமர்சனங்களும் படத்தின் வசூலை பாதித்தது. இருந்தாலும் 100 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று இரவு சென்னையில் பத்திரிகையாளர்களை 'ரெட்ரோ' படக்குழு சந்திக்க உள்ளது. ஆனால், நிகழ்ச்சி அரங்கிற்குள் கேமராவிற்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் முன்பு நன்றி தெரிவித்து பேசும் நிகழ்வும் நடக்க வாய்ப்பில்லை என்று விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. ஒரு 'கெட் டு கெதர்' போல நன்றி தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி பதில் என்று நிகழ்த்தினால் தேவையற்ற கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு என நினைக்கிறார்களாம். இப்படத்திற்கான நெகட்டிவிட்டியை வேண்டுமென்றே சிலர் பரப்புகிறார்கள் என்றும் படக்குழு வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. மற்ற மொழிகளில் கூட சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் பற்றியும் இப்படத்தின் தொடர்பாக நெகட்டிவ் செய்திகளை வெளியிட சில போட்டி நடிகர்கள், நடிகைகளின் ஆதரவுடன் சிலர் செய்வதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.