ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ரெட்ரோ'. படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தும், ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை. நெகட்டிவ்வான விமர்சனங்களும் படத்தின் வசூலை பாதித்தது. இருந்தாலும் 100 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று இரவு சென்னையில் பத்திரிகையாளர்களை 'ரெட்ரோ' படக்குழு சந்திக்க உள்ளது. ஆனால், நிகழ்ச்சி அரங்கிற்குள் கேமராவிற்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் முன்பு நன்றி தெரிவித்து பேசும் நிகழ்வும் நடக்க வாய்ப்பில்லை என்று விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. ஒரு 'கெட் டு கெதர்' போல நன்றி தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி பதில் என்று நிகழ்த்தினால் தேவையற்ற கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு என நினைக்கிறார்களாம். இப்படத்திற்கான நெகட்டிவிட்டியை வேண்டுமென்றே சிலர் பரப்புகிறார்கள் என்றும் படக்குழு வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. மற்ற மொழிகளில் கூட சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் பற்றியும் இப்படத்தின் தொடர்பாக நெகட்டிவ் செய்திகளை வெளியிட சில போட்டி நடிகர்கள், நடிகைகளின் ஆதரவுடன் சிலர் செய்வதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.