தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

தென்னிந்தியத் திரையுலகத்தில் குறிப்பாக தமிழ், தெலுங்கு சினிமாவில் பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகளின் ஆதிக்கம்தான் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அங்கு ஓரிரு படங்களில் நடித்து பெரிய வரவேற்பைப் பெறாத நடிகைகள் அப்படியே தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். அதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாம்.
இப்போதும் பாலிவுட் நடிகைகளுக்கு சிலர் முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் இங்குள்ள நடிகைகளும் மற்ற மொழிகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர். குறிப்பாக மலையாள நடிகைகள் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிகம் நடிக்கின்றனர். இப்போது அந்த இடத்திற்கு கன்னட நடிகைகளும் போட்டிக்கு வர ஆரம்பித்துள்ளார்கள்.
ராஷ்மிகா மந்தனாவின் வருகை, வெற்றிக்குப் பிறகு தற்போது அந்த டிரெண்ட் ஆரம்பித்துள்ளது. 'கேஜிஎப்' நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்த 'ஹிட் 3' கடந்த வாரம் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. அடுத்து மற்றொரு கன்னட நடிகையான ருக்மணி வசந்த் என்டிஆரின் 31வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் அப்படத்தை இயக்கி வருகிறார். ருக்மணி தமிழில் அறிமுகமாகும் 'ஏஸ்' இந்த மாதம் வெளியாகிறது. அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மதராஸி' படத்தில் நடித்து வருகிறார்.
எந்த மொழியிலிருந்து வந்தாலும் படம் வெற்றி என்றால் சென்டிமென்ட்டாக அதை பாலோ செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் சினிமாக்காரர்கள்.




