டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்த படம் 'நல்லவனுக்கு நல்லவன்'. இந்த படத்தில் 'முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கரை வில்லன் ஆக்கியது போன்று ஒரு ஹீரோவை ரஜினிக்கு வில்லன் ஆக்குவது என்று ஏவிஎம் முடிவு செய்தது. இதற்காக தேர்வானவர் அப்போது இளம் நடிகராக வளர்ந்து வந்த கார்த்திக்.
ஏவிஎம் சரவணன், கார்த்திக்கை சந்தித்து பேசினார். 'ஏவிஎம் நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஆனால் நான் வில்லனாக நடித்தால் எனது இமேஜ் போய்விடும், அதன்பிறகு வில்லனாக மட்டும் நடிக்க கூப்பிடுவார்கள்' என்று கூறி நடிக்க மறுத்தார்.
இதற்கு பதில் அளித்த சரவணன் 'அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த படத்தில் வில்லனாக நடியுங்கள், அடுத்து உங்களை ஹீரோவாக போட்டு ஒரு படம் எடுப்போம், அதை எஸ்.பி.முத்துராமனே இயக்குவார். அந்த படத்தின் கதை உங்கள் வில்லன் இமேஜை உடைப்பதாக இருக்கும்' என்றார். அதன்பிறகு கார்த்திக் நடிக்க சம்மதித்தார்.
கார்த்திக்கு கொடுத்த வாக்குறுதிக்காக கார்த்திக் நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான படம் 'நல்லதம்பி'. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கார்த்திக் ஹீரோவாக நடித்தார்.




