சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அமரன் படத்திற்கு பின் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா இயக்கும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதன்பிறகு குட் நைட் என்ற படத்தை இயக்கிய விநாயக் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடிகர் அஜித் குமார், ஷாலினி உடன் இணைந்து சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை பார்த்தார்கள். அதுகுறித்த புகைப்படங்கள் அப்போது வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா ஆகியோருடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.