டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்த 2023ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான், டங்கி என மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக கிங் என்ற படத்தில் மே 18ம் தேதியிலிருந்து நடிக்கப் போகிறார் ஷாருக்கான். ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார். 2023ம் ஆண்டில் இந்த படத்தில் நடிக்க ஷாருக்கானை ஒப்பந்தம் செய்தபோது தீபிகா படுகோனேவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்தார்களாம். அதன்பிறகு அவர் கர்ப்பமாக இருந்ததால் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் கிங் படம் 2024ல் திட்டமிட்டபடி தொடங்காமல் இப்போது 2025, மே மாதம் தொடங்குவதால் தீபிகா படுகோனேவும் குழந்தை பிறந்து மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அதனால் முதலில் திட்டமிட்டபடி தீபிகா படுகோனேவையே கிங் படத்தின் கதாநாயகி ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதனால் நயன்தாராவுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு நழுவி சென்றுள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.




