Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'தொடரும்' பட போஸ்டர் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; போலீஸுக்கே பூமராங் ஆக திரும்பிய கருத்துக்கள்

28 ஏப், 2025 - 03:38 IST
எழுத்தின் அளவு:
Helmet-awareness-through-the-poster-of-the-thudarum-comments-that-boomeranged-back-to-the-police


போக்குவரத்து போலீசார் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெறும் காட்சிகளை வைத்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' படத்தின் போஸ்டர் ஒன்றை வைத்து கேரள போலீஸார் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் மோகன்லால் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டி செல்கிறார். இதை குறிப்பிட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.

அதே சமயம் மோகன்லால் ரசிகர்கள் பலரும் இதற்கு கிண்டலாக விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதில் கருத்துக்களில் கூறப்பட்டுள்ளதாவது, “இது ஒரு படத்தின் போஸ்டர். மோகன்லால் தான் வண்டி ஓட்டுகிறார் என்பது தெரிய வேண்டும் என்பதற்காக ஹெல்மெட் அணியாமல் இந்த போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல படத்தின் காட்சிப்படி தனது காரை மகனும் அவன் நண்பர்களும் தெரியாமல் எடுத்து ஓட்டி செல்லும் போது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக அவசரத்திற்கு கிடைத்த தனது நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு காரை விரட்டி செல்வதாக காட்சி. இதில் ஹெல்மெட் எல்லாம் போட அவர் யோசித்துக் கொண்டிருப்பாரா?

அதேசமயம் இதே படத்தில் இன்னொரு காட்சியில் மோகன்லால் கார் ஓட்டிக் கொண்டு வரும்போது, காருக்கு பக்கவாட்டில், அவருக்கு தெரிந்த ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கும் பையன் ஹெல்மெட் அணியாமல் மோகன்லாலுடன் பேசிக்கொண்டே டூவீலர் ஓட்டிக்கொண்டு வருவான். அப்போது அவனிடம் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வண்டி ஓட்டு, அதுதான் பாதுகாப்பு என்று மோகன்லால் சொல்வார். உடனே அந்த இளைஞன் ஹெல்மெட்டை எடுத்து அணிந்து கொள்வார். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு படவில்லையா” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தொடரும் கதை என்னுடையது ; உதவி இயக்குனர் போலீஸில் புகார்தொடரும் கதை என்னுடையது ; உதவி ... இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ராம்சரணுக்கு செல்லப்பிராணியால் கிடைத்த பெருமை இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in