இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பெண்களின் அலமாரிகளில் முக்கிய இடம் வகிப்பது காஞ்சிபுரம் பட்டு. அவரவர் வசதிக்கேற்ப விலை உயர்ந்த ஒரு காஞ்சிபுரம் பட்டு எடுத்து தங்கள் 'புடவை கலெக்ஷனில்' சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது ஆசை. அந்த ஆசை இன்று நேற்றல்ல, காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பட்டுப் புடவைகளில் தனி இடத்தைப் பிடித்திருப்பது காஞ்சிபுரம் பட்டு.
இன்றைய கதாநாயகியரில் எந்த ஆடை அணிந்தாலும் அதில் தனி அழகுடன் ஜொலிப்பவர் பூஜா ஹெக்டே. மாடர்ன் உடையானாலும், புடவை ஆனாலும் அவரது வசீகரமே தனி.
70 வருட காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்து போட்டோ ஷுட் எடுத்து அவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். “70 வருட பழமையான ஒரு அழகிய புடவை. எனது அழகான காஞ்சிபுரம் பாட்டியின் புடவை, என்னை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. முதல் மழைக்குப் பிறகு ஈரமான மங்களூருவின் சேற்று வாசம், திருமணத்திற்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் மல்லிகையின் புதிய வாசனை… ஓ… எளிமையான விஷயங்களில் எத்தனை அழகு,” என அந்த 70 வருட புடவை அணிந்த அனுபவத்தை அற்புதமாகப் பதிவிட்டுள்ளார்.
அந்த அழகுடன் அவருடைய வெட்கமும் ஒரு 'ரெட்ரோ' அழகுதான்...