‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தனது 29வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடிப்பவர் மகேஷ்பாபு.
ரியல் எஸ்டேட் விளம்பரப் படம் ஒன்றில் நடித்த மகேஷ்பாபு அதற்காக பெற்ற சம்பளம் குறித்த விசாரணை தற்போது அமலாக்கத்துறையில் நடந்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மக்களை ஏமாற்றியதாக, அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்தற்காக பெற்ற சம்பளமும் விசாரணை வளையத்தில் சிக்கியது. அந்த நிறுவனத்திடமிருந்து அவர் எந்த விதத்தில் சம்பளம் பெற்றார் என்பதைத் தெரிவிக்க, அவருக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர் இன்று ஆஜராக வேண்டும்.
ஆனால், தனக்கு கூடுதல் அவகாசம் தரும்படி மகேஷ்பாபு பதில் கடிதம் எழுதியுள்ளாராம். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.