ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
‛நாயகன்' படத்தில் முதன்முறையாக இணைந்த கமலும், மணிரத்னமும் நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது ‛தக்லைப்' படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்புவும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். ஜூன் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தக்லைப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். அந்தவகையில், மணிரத்னம் இயக்கத்தில் ‛செக்கச் சிவந்த வானம், தக்லைப்' என்ற இரண்டு படங்களில் நடித்துள்ள சிம்பு, மூன்றாவது முறையாகவும் நடிக்கப்போகிறார். தற்போது கைவசமுள்ள படங்களை முடித்து கொடுத்து விட்டு மணிரத்னம் படத்தில் அவர் இணைவார் எனத் தெரிய வந்துள்ளது.