லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
‛நாயகன்' படத்தில் முதன்முறையாக இணைந்த கமலும், மணிரத்னமும் நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது ‛தக்லைப்' படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்புவும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். ஜூன் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தக்லைப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். அந்தவகையில், மணிரத்னம் இயக்கத்தில் ‛செக்கச் சிவந்த வானம், தக்லைப்' என்ற இரண்டு படங்களில் நடித்துள்ள சிம்பு, மூன்றாவது முறையாகவும் நடிக்கப்போகிறார். தற்போது கைவசமுள்ள படங்களை முடித்து கொடுத்து விட்டு மணிரத்னம் படத்தில் அவர் இணைவார் எனத் தெரிய வந்துள்ளது.