மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த பெண் நிவேதா பெத்துராஜ். மாடலிங் துறையில் இருந்த இவர் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்து ‛என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். துபாயில் வசிக்கும் இவர் சமீபத்தில் ரஜித் இப்ரான் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் அவ்வப்போது சமூகம் சார்ந்த கருத்துக்களை பதிவிடும் இவர் இப்போது, ‛‛செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும் கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம் தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை, நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்துவிடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை'' என குறிப்பிட்டுள்ளார்.