லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‛ரெட்ரோ' படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வருகிறார் சூர்யா. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட சூர்யா, ரெட்ரோ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய கதையில் உருவாகி இருக்கிறது என்று பேசியவர், தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் தனது 45வது படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
வருகிற மே மாதம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ள சூர்யா, ரெட்ரோ படம் வெளியாகும் அதே மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நானியின் ‛ஹிட் -3' படமும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த அறிவிப்பு மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் ‛வாடிவாசல்' மீண்டும் தள்ளிப் போவது தெரிய வந்துள்ளது.